Recent Comments

About Template

Random Posts

Latest Post

இங்கிலாந்தில் 9 மாத இரட்டைக் குழந்தைகள் தானாகவே நீச்சலடித்து விளையாடுகின்றன

Written By Unknown on Monday, 10 December 2012 | 08:32


தென்மேற்கு இங்கிலாந்து நகரான கிளவ்ஸ்டர்ஷியரில் வசிக்கும் விக்டர் மற்றும் சர்லோட்டி ஆகியோரின் 9 மாத இரட்டைக் குழந்தைகளான வில்லியம் மற்றும் எலினிட்டா ஆகியோர் யாருடைய உதவியும் இல்லாமல் நீச்சல்குளத்தில் 25 மீட்டர் நீந்திச் சென்று விளையாடுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. திறமை வாய்ந்த நீச்சல் வீரர்கள் செய்யும் அனைத்து சாகசங்களையும் அந்த இரட்டை குழந்தைகளும் தற்போது நிகழ்த்திக் காட்டுகின்றன. நீருக்குள் மூழ்கிய இந்த இரண்டு குழந்தைகளும் விளையாடுகின்றன, ஆடிப் பாடுகின்றன. அந்தக் குழந்தைகளுக்கு இந்தத் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த சின்னஞ்சிறு வயதில், நீச்சலில் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றன என்று இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அந்த இரட்டைக் குழந்தைகள் நீச்சல்குளத்தில் செய்யும் ஒவ்வொரு சாகசங்களும் அங்குள்ள பார்வையாளர்களையும் பயிற்சியாளர்களையும் மிரளவைக்கின்றன.

'சீன்' பட நடிகைகளுக்கு தன்னம்பிக்கை ஜாஸ்தியா இருக்குமாம், லைபும் நல்லாருக்குமாம்!

Written By Unknown on Sunday, 9 December 2012 | 04:36


லண்டன்: மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆபாசப் படங்களில் நடிக்கும் பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்குமாம். அதேபோல வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்குமாம். இதை ஒரு சர்வே கூறியுள்ளது.
ஜர்னல் ஆப் செக்ஸ் ரிசர்ச் என்ற பத்திரிக்கை இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில்தான் இப்படிக் கூறியுள்ளனர்.
 female porn stars have higher self
அதில் கூறப்பட்டுள்ள சுவாரஸ்ய விஷயங்கள்...
செக்ஸ் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு தன்னம்பிக்கை அதிகம் இருக்குமாம். பிற பெண்களுடன் ஒப்பிடுகையில் இவர்கள் கூடுதல் நம்பிக்கையோடு இருப்பார்களாம். அதேசமயம், அவர்கள் உளவியல் பிரச்சினைகளில் சிக்கி உழன்று கொண்டிருக்காமல் திடமான மனதுடன் இருப்பார்களாம்.
அவர்கள் செக்ஸ் படங்களில் நடிக்க அவர்கள் சிறு வயதில் செக்ஸ் சித்திரவதைகளை அனுபவித்திருப்பார்கள் என்ற பொதுவான நம்பிக்கையையும் இந்த சர்வே தகர்த்துள்ளதாம். காரணம், பெரும்பாலான செக்ஸ் பட நடிகைகள், விரும்பியே இந்தத் துறைக்கு வருகின்றனராம். அதாவது சுய காலில் நிற்கும் ஆர்வம், தன்னம்பிக்கையைப் பெறுவது, வாழ்க்கையை பாசிட்டிவாக எதிர்கொள்ளும் மனப் பக்குவம் காரணமாகவே அவர்கள் இந்தத் துறையை தேர்வு செய்து வருகின்றனராம்.
மற்ற பெண்களுடன் ஒப்பிடுகையில், ஆபாசப் பட நடிகைகள் எதையும் பாசிட்டிவான கோணத்துடன் அணுகுவார்களாம். செக்ஸ் குறித்த திருப்திகரமான உணர்வும் இவர்களுக்கு இருக்குமாம். எதையும் தைரியமாக எதிர்கொள்ளும் மனப் பக்குவமும் இவர்களுக்கு இருக்குமாம்.
பென்சில்வேனியாவைச் சேர்ந்த ஷிப்பன்ஸ்பர்க் பல்கலைக்கழகம், டெக்ஸாஸ் மகளிர் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டன.
இந்த ஆய்வுக்காக ஆபாசப் படம் உள்ளிட்டவற்றில் நடித்து வரும் 18 முதல் 50 வயது வரையிலான 177 நடிகைகளிடம் தகவல் சேகரித்தார்களாம்.

ஆபாச தளத்தில் போன் நம்பருடன் படங்கள்- நடிகை சுமா அதிர்ச்சி - போலீசில் புகார்!


Tamil Actress Photos In Adult Website தமிழில் நடித்து வரும் சுமா என்ற நடிகையின் படங்கள் ஆபாச இணையதளத்தில் வெளியாகி பரபரப்பு கிளப்பியுள்ளது.
நடிகை சுமா என்றே ரிஷிகா, பாலிவுட்டிலிருந்து தமிழுக்கு வந்தவர். அர்ஜூன் ஜோடியாக ‘துரை' படத்தில் நடித்தார். 2008-ல் இப்படம் ரிலீசானது.
தற்போது சந்தன கடத்தல் வீரப்பன் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் ‘வனயுத்தம்' படத்தில் நடித்து வருகிறார்.
சுமாவின் ஆபாச படங்கள் இன்டர்நெட்டில் பரவியுள்ளது திடீர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. சுமாவின் ஆபாச படங்களுடன் செல்போன் நம்பரையும் பதிவு செய்து, 'விருப்பம் இருந்தா கூப்பிடுங்க... கொடுக்கும் விலைக்கு ஏற்ற சேவை' என்றெல்லாம் தன் 'சேவை' பற்றி அவரை கூறுவது போல ஆங்கிலத்தில் ப்ரொபைல் உருவாக்கி வைத்துள்ளனர்.
தகவல் தெரிந்ததும் அதிர்ச்சியடைந்த சுமா, இன்டர்நெட்டில் தன்னை இழிவுபடுத்தி படங்கள் வெளியிட்டுள்ளதாக மும்பை போலீசில் சுமா புகார் அளித்துள்ளார்.
அந்த மனுவில், "நான் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண். என்னை தப்பானவள்போல் சித்தரித்து இன்டர்நெட்டில் படங்கள் வெளியிட்டு உள்ளனர். அதில் என் போன் நம்பரையும் குறித்துள்ளனர். இதனால் எனக்கு தவறான எஸ்.எம்.எஸ்.கள் வருகின்றன.
எனது தாய் ஆசிரியை வேலை பார்க்கிறார். தந்தை சாப்ட்வேர் கம்பெனியில் வேலை பார்க்கிறார். நான் மாடலிங் செய்து நடிக்க வந்தேன். என்னை இழிவுபடுத்தி படங்களை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்று குறிப்பிட்டுள்ளார்.

லைப்ரரிக்குள் புகுந்து செக்ஸ் ஆட்டம்.. டென்ஷனான அமெரிக்க பல்கலைக்கழகம்


 Top American University Library Porn Storm நியூயார்க்: நியூயார்க்கைச் சேர்ந்த கார்னல் சட்டப் பல்கலைக்கழகத்தில் உள்ள லைப்ரரிக்குள் புகுந்த ஒரு மாடல் அழகி, அங்கு ஆபாச அசைவுகளில் ஈடுபட்டு அதை தனது செல்போனில் பதிவு செய்து வெளியிட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்தப் பெண் மாடல் அழகி கேமரூன் நைட் என்று கூறப்படுகிறது. இவர் ஆபாசப் படங்கள் பலவற்றில் நடித்திருப்பவர் ஆவார். பல்கலைக்கழக லைப்ரரிக்கு வந்துள்ள அவர் அங்குள்ள கார்பென்டர் ஹால் என்ற அரங்குக்குப் போயுள்ளார். பி்ன்னர் தான் கையோடு கொண்டு வந்திருந்த செக்ஸ் பொம்மைகளை எடுத்து அதை வைத்து பல்வேறு ஆபாச செயல்களில் ஈடுபட்டார்.இதை தனது செல்போனில் பதிவு செய்தார்.
இந்தக் காட்சிகள் மொத்தம் 43 நிமிடங்கள் ஓடுகிறது. அதில் ஐந்து நிமிட வீடியோக் காட்சியை கல்லூரி நோட்டீஸ் போர்டில் போட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பட்டப் பகலில் இந்த செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.
மற்றவர்கள் நூலகத்தில் ஆங்காங்கு படித்துக்கொண்டிருந்த நிலையி்ல் கேமரூன் இந்த செக்ஸ் செயலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து தற்போது பல்கலைக்கழக நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறதாம்.

ஆபாச படங்களில் நடித்ததை நினைத்து வெட்கப்படவில்லை: சன்னி லியோன்


Sunny Leone Is Not Ashamed Her Past மும்பை: தனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்று ஆபாச பட நடிகையாக இருந்து பாலிவுட்டில் நுழைந்திருக்கும் சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.
ஆபாச பட நடிகையாக இருந்தவர் கனடாவில் வாழும் இந்தியரான சன்னி லியோன். ஏராளமான XXX கிரேட் புளூ பிலிம்களில் நடித்தவர்.
ஜிஸ்ம் 2 என்ற இந்தி படம் மூலம் பாலிவுட்டுக்கு வந்துள்ளார். பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அந்த படத்தைப் பார்த்தவர்கள் சன்னி லியோன் ஒரு உணர்ச்சியே இல்லாத மரக்கட்டை என்று தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் பாலிவுட்டில் இருப்பது பற்றி சன்னி லியோன் கூறுகையில்,
இந்திய மக்கள் என் மீது காட்டும் அன்பைப் பார்த்து ஆச்சியப்படுகிறேன். அடுத்த 2 ஆண்டுகள் இங்கு தான் படத்தில் நடிக்கவிருக்கிறேன். என்னை பாலிவுட்டில் அறிமுகப்படுத்திய பூஜா பட்டிற்கு நன்றி. என்னை பலரும் ஆபாச பட நடிகை என்று சொல்வதில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. இது எனக்கு புதிய உலகம். இங்கு நான் எப்படி நடந்து கொள்கிறேன் என்பதை வைத்து தான் மக்கள் என்னைப் பற்றி கருத்து தெரிவிக்க வேண்டும். நான் எனது கடந்த காலத்தை நினைத்து வெட்கப்படவில்லை என்றார்.
அவர் அடுத்ததாக தி டர்ட்டி பிக்சரை தயாரித்த ஏக்தா கபூரின் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

5ல் 1 ஜெர்மன் இளைஞர் இன்டர்நெட்டுக்காக செக்ஸை தியாகம் செய்ய ரெடி!


 One Five Germans Ready Sacrifice மெல்போர்ன்: ஜெர்மானியர்களில் கிட்டத்தட்ட 20 சதவீதம் பேர் செக்ஸ் உறவை விட இன்டர்நெட் பயன்பாட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர் என்று நியோன் என்ற பத்திரிக்கைக்காக மேற்கொண்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
நியோன் என்ற பத்திரிக்கைகாக போர்ஸா என்னும் நிறுவனம் இன்டர்நெட் இணைப்பு வைத்திருக்கும் 18 முதல் 35 வயதுக்குட்பட்டோரிடம் ஒரு கணக்கெடுப்பை நடத்தியது. அதில் 18 சதவீதம் பேர் செக்ஸை விட இன்டர்நெட்டை பயன்படுத்த தான் அதிக ஆர்வம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இன்டர்நெட் பயன்பாடு மிகவும் முக்கியம் என்று 57 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். இன்டர்நெட் முக்கியம் தான் ஆனால் அதைத் தாண்டியும் ஒரு வாழ்க்கை உள்ளது என்று நியோன் பத்திரிக்கை தெரிவி்த்துள்ளது.
இந்த கணக்கெடுப்பின் மூலம் இன்டர்நெட்டை கவனமாகவும், விரும்பியும் பயன்படுத்தும் தலைமுறையைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும் என்று அந்த பத்திரிக்கையின் ஆசிரியர் வெரா ஸ்ரூடர் தெரிவித்ததாக தி டெய்லி டெல்கிராப் செய்தி வெளியிட்டுள்ளது.

ஆன்லைன் போர்னோகிராபி: பிஞ்சில் பழுக்கும் இங்கிலாந்து சிறுவர்கள்.


 Misusing Internet England Children லண்டன்: இங்கிலாந்தில் மிக இளம் வயதிலேயே பாலியல் குற்றவாளிகளாக மாறி வரும் சிறுவர்களின் எண்ணிக்கை பெருகி வருவது அந்த நாட்டு காவல்துறையையும், அரசையும், பெற்றோர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் வரை கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களுக்காக கைதாகியுள்ளனராம்.
ஆன்லைன் மூலம் போர்னோ படங்களைப் பார்த்து இவர்கள் கெட்டுச் சீரழிவதாகவும், கற்பழிப்பு உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பள்ளிச் சிறார்களிடையே இத்தகையக குற்றப் போக்கு அதிகரித்து வருவது காவல்துறையினரை அதிர வைத்துள்ளதாம். இங்கிலாந்து காவல்துறை கடந்த ஒரு வருடத்தில் 10 வயது சிறுவன் ஒருவனை கற்பழிப்பு குற்றச்சாட்டின் கீழ் கைது செய்துள்ளது. மேலும் 13 வயதுக்குட்பட்ட 7 பேர் பாலியல் குற்றச்சாட்டின்பேரில் கைதாகியுள்ளனராம்.
ஆன்லைன் போர்னோகிராபிதான் பெருமளவில் இளம் சிறார்கள் மனதைப் பாழ்படுத்தி வருவதாகவும் காவல்துறையினர் கூறுகிறார்கள்.
செக்ஸ் என்றால் என்ன, செக்ஸ் உறவு என்றால் என்ன, எப்படி அதை அடைவது என்பது உள்ளிட்ட விவரங்கள் இன்டர்நெட்டில் படு தாராளமாக கிடைப்பது இளம் சிறார்களிடையே பெரும் சீரழிவை ஏற்படுத்தி வருவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இளம் சிறார்கள் மத்தியில் பாலியல் விஷயங்களில் மனதில் விஷத்தைக் கலப்பது போல இன்டர்நெட் தற்போது இருக்கிறது. இன்டர்நெட்டில் தேவையில்லாததைப் பார்த்துத்தான் இளம் சிறார்கள் கெட்டுப் போகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மைதான் என்பது போல இப்போது 10 வயது சிறுவன் கற்பழிப்பு வழக்கில் கைதாகியிருப்பது உள்ளது என்கிறார் குழந்தைகளுக்கான இன்டர்நெட் பாதுகாப்பு கூட்டணி என்ற அமைப்பின் ஜான் கார்.
இன்டர்நெட்டில் ஆபாசப் படம் பார்ப்பது உள்ளிட்டவற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று இங்கிலாந்து பிரதமர் கேமரூன் கூறியுள்ளார். இதுதொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளையும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார். மேலும் ஒருவர் கம்ப்யூட்டர் வாங்கும்போது பல்வேறு வகையான பில்டர்களையும் வாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்களாம்.
ஆனால் இந்த நடவடிக்கைகளால் ஆபாசப் படம் பார்ப்பதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றே கூறப்படுகிறது. போலீஸாரிடம் சிக்கிய ஒரு சிறுவனின் கதையைப் பாருங்கள்...
12 வயதான சிறுவன் ஒருவன் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் 9 வயது சிறுமியை கற்பழித்து விட்டான். அவனிடம் விசாரணை நடத்தியபோது ஆன்லைன் போர்னோகிராபி படத்தைப் பார்த்த அவன், தானும் வளர்ந்த ஒரு ஆண்மகன்தான் என்பதை நிரூபித்துக் கொள்ள அந்த சிறுமியை கற்பழித்தானாம். அதாவது தனது ஆண்மையைப் பரிசோதித்துப் பார்க்க இப்படிச் செய்தானாம்.
அந்தப் பெண்ணைக் கற்பழிக்க முடிவு செய்த பின்னர் பல ஆபாசப் பட தளங்களைப் பார்த்து திறமையை வளர்த்துக் கொண்டானாம். பின்னர் ஒரு தோட்ட வீட்டின் பின்புறம் உள்ள ஷெட்டுக்கு அந்த சிறுமியைக் கூட்டிக் கொண்டு போய், தான் வீடியோ படத்தில் பார்த்தது போல செய்து பலாத்காரம் செய்துள்ளான்.
அந்த சிறுமி தனது பெற்றோரிடம் வயிறு வலிப்பதாக கூறியதால் அவர்கள் என்ன ஏது என்று விசாரித்தபோது உண்மை தெரிய வந்ததாம்.
அந்த சிறுவன் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி முதல் 2011 ஜனவரி 31ம் தேதி வரை பலமுறை இப்படி அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான். மேலும் தனது சக நண்பன் ஒருவன் முன்னிலையிலும் கூட அந்த சிறுமியை அவன் பலாத்காரம் செய்துள்ளான்.
தற்போது அவன் சமூக சேவகர்களின் நேரடிக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளான். 18 வயது வரை அவனை இவர்கள் கண்காணித்து வருவார்களாம்.
நம் ஊரிலும் தற்போது பாலியல் குற்றங்களுக்காக கைதாகும் பள்ளிமாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு காரணம் இணையதள பயன்பாடும், செல்போன்களில் ஆபாசப் படங்களை பார்ப்பதும்தான் காரணம் என்று காவல்துறையினர் கூறியுள்ளனர்.
 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilgunda - All Rights Reserved
Template Created by Creating Website
Proudly powered by Blogger