Home » » இங்கிலாந்தில் 9 மாத இரட்டைக் குழந்தைகள் தானாகவே நீச்சலடித்து விளையாடுகின்றன

இங்கிலாந்தில் 9 மாத இரட்டைக் குழந்தைகள் தானாகவே நீச்சலடித்து விளையாடுகின்றன

Written By Unknown on Monday, 10 December 2012 | 08:32


தென்மேற்கு இங்கிலாந்து நகரான கிளவ்ஸ்டர்ஷியரில் வசிக்கும் விக்டர் மற்றும் சர்லோட்டி ஆகியோரின் 9 மாத இரட்டைக் குழந்தைகளான வில்லியம் மற்றும் எலினிட்டா ஆகியோர் யாருடைய உதவியும் இல்லாமல் நீச்சல்குளத்தில் 25 மீட்டர் நீந்திச் சென்று விளையாடுவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. திறமை வாய்ந்த நீச்சல் வீரர்கள் செய்யும் அனைத்து சாகசங்களையும் அந்த இரட்டை குழந்தைகளும் தற்போது நிகழ்த்திக் காட்டுகின்றன. நீருக்குள் மூழ்கிய இந்த இரண்டு குழந்தைகளும் விளையாடுகின்றன, ஆடிப் பாடுகின்றன. அந்தக் குழந்தைகளுக்கு இந்தத் திறமை இயற்கையாகவே அமைந்திருக்கின்றன என்று நினைக்கிறேன். இந்த சின்னஞ்சிறு வயதில், நீச்சலில் அனைத்து வித்தைகளையும் கற்றுத் தேர்ந்திருக்கின்றன என்று இரட்டைக் குழந்தைகளின் பெற்றோர் தெரிவிக்கின்றனர். அந்த இரட்டைக் குழந்தைகள் நீச்சல்குளத்தில் செய்யும் ஒவ்வொரு சாகசங்களும் அங்குள்ள பார்வையாளர்களையும் பயிற்சியாளர்களையும் மிரளவைக்கின்றன.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilgunda - All Rights Reserved
Template Created by Creating Website
Proudly powered by Blogger