Home » » 40 ஆண்டுகளாக நிலவில் பறக்கும் அமெரிக்க கொடிகள்: நீல் ஆம்ஸ்ட்ராங் நட்ட கொடி மட்டும் சேதம்

40 ஆண்டுகளாக நிலவில் பறக்கும் அமெரிக்க கொடிகள்: நீல் ஆம்ஸ்ட்ராங் நட்ட கொடி மட்டும் சேதம்

Written By Unknown on Sunday, 9 December 2012 | 04:00


வாஷிங்டன்: அமெரிக்க விஞ்ஞானிகள் நிலவில் கால் வைத்து 40 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் அங்கே நட்டு வைத்த கொடிகள் இன்னும் சேதமடையாமல் பறந்து கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1969ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி அப்போலோ 11 விண்கலத்தில் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் உள்ளிட்ட அமெரிக்க விஞ்ஞானிகள் முதன் முதலாக நிலவில் கால் வைத்தனர். இதைத் தொடர்ந்து அமெரிக்கர்கள் 5 முறை நிலவுக்கு சென்று வந்துவிட்டனர். கடந்த 1972ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி அப்போலோ 17 விண்கலத்தில் அமெரிக்க விஞ்ஞானிகள் சென்றது தான் நிலவுக்கு அமெரிக்கர்கள் கடைசியாகச் சென்றதாகும்.
இந்த 6 முறையும் தங்கள் பயணத்தின் நினைவாக விஞ்ஞானிகள் அமெரிக்க கொடியை நிலவில் நட்டு வைத்தனர். அந்த கொடிகளில் நிலவுக்கு முதன் முதலாகச் சென்ற நீல் ஆம்ஸ்டிராங் நட்டுவைத்த கொடியைத் தவிர மற்ற 5 கொடிகள் நிலவின் தட்பவெட்பத்தையும் தாண்டி இத்தனை ஆண்டுகள் கழித்தும் பறந்து கொண்டிருக்கின்றன. நாசாவின் கேமரா எடுத்துள்ள புகைப்படத்தில் இந்த கொடிகள் பறப்பது தெளிவாகத் தெரிகிறது.
தொழில்நுட்பம் எவ்வளவோ முன்னேறினாலும் இதுவரை அமெரிக்க விஞ்ஞானிகள் மட்டுமே நிலவில் கால் வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilgunda - All Rights Reserved
Template Created by Creating Website
Proudly powered by Blogger