Home » » கேரளாவில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

கேரளாவில் 6 வயது மகளை பலாத்காரம் செய்த தந்தை

Written By Unknown on Sunday, 9 December 2012 | 03:51


திருவனந்தபுரம்: கேரளாவில் 6 வயது சிறுமியை தந்தையே பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படு்த்தி உள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பெரும்பாவூரைச் சேர்ந்தவர் சசிதரன். அவரது மனைவி விமலா. அவர்களுக்கு 6 வயதில் ஒரு மகள் உண்டு. கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து சிறுமியை வாரத்தில் சில நாட்கள் தந்தையுடன் தங்கியிருக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி சிறுமி சசிதரனுடன் சில நாட்கள் தங்கியிருந்தாள்.
இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் சிறுமியை தாய் விமலா தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். அப்போது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து விமலா எர்ணாகுளம் எஸ்.பி.யிடம் நேற்று புகார் கொடுத்தார். அதில், தனது கணவர் சசிதரன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் சேர்ந்து மகளை பலாத்காரம் செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து போலீசார் சசிதரனிடம் விசாரணை நடத்தி வருகி்ன்றனர்.
Share this article :

0 comments:

Post a Comment

 
Support : Creating Website | Johny Template | Mas Template
Copyright © 2011. Tamilgunda - All Rights Reserved
Template Created by Creating Website
Proudly powered by Blogger